கோயமுத்தூர் யெங் இந்தியன் சேப்டர்ஸ் சார்பில் இன்று நடிகர் ஸ்ரீகாந்த் "கோவை விழா"வினை துவக்கி வைக்கிறார்


கோயமுத்தூர் 'யெங் இந்தியன்' சேப்டர்ஸ் அமைப்பின் சார்பில் இன்று "கோவை விழா 2017" துவக்க நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

கோவை மாவட்டத்தின் பிரபலமான புரூக்பீல்ட் வனிகவளாகத்தில் நடைபெறவுள்ள இதன் துவக்க நிகழ்ச்சியில் நடிகர் ஸ்ரீகாந்த் சிறப்பு விருந்தினராக பங்கேற்று துவக்கி வைக்க உள்ளார். 

இதைத்தொடர்ந்து இந்நிகழ்ச்சியில், கோயமுத்தூர் யெங் இந்தியன் சேப்டர்ஸ் அமைப்பினரால் உருவாக்கப்பட்ட "கோவை விழா பாட்டு" வெளியீடு நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.

மேலும், கடந்த ஒரு வருடமாக யெங் இந்தியன் அமைப்பினரால் மேற்கொள்ளப்பட்ட சமூகச் சேவை, 'நோ ஹாரன்', குழந்தைகள் மீதான வன்முறைகள் குறித்த விழிப்புணர்வு, 'ஸ்வச் பாரத்' தூய்மை பணி உள்ளிட்டவை குறித்து வீடியோவும் வெளியிடப்பட உள்ளது. தொடர்ந்து, கோவையின் சமூக மேம்பாட்டாளர்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்டோர் கவுரவப்படுத்தப்பட உள்ளனர். பின், நடிகர் ஸ்ரீகாந்த் பார்வையாளர்களிடம் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளார்.

முன்னதாக, கோவை விழா இன்று துவங்கி வரும் பிப்ரவரி 5ம் தேதி வரை புரூக்பீல்ட் வனிகவளாகம் உட்பட மாவட்டத்தின் பல்வேறு முக்கியப் பகுதிகளில் நடைபெறும் எனவும், இவ்விழாவின் போது பல்வேறு தனியார் அமைப்புகள் கோவை யெங் இந்தியன் சேப்டர்ஸ் உடன் இணைந்து அவ்வமைப்பின் பேனரின் கீழ் 90 நிகழ்ச்சிகள் நடத்தப்படும் எனவும் இதன் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

மேலும், கடந்த வருடத்தை விட இவ்வருடம் பல்வேறு விதமான நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளதால் ஏராளமானோர் இதில் பங்குபெருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும் இந்நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...